கல்முனை மட்டக்களப்பு வீதியில் மின்கம்பத்துடன் வான் மோதி சாரதி பலி! ஐவர் படுகாயம்


கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி வந்த வான் ஒன்று இன்று அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மின்கம்பத்துடன் மோதியதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


அந்த வானில் பயணம் செய்தவர்களில், 3 பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


சம்பவத்தில் உயிரிழந்த சாரதி கல்முனையைச்சேர்ந்த 38 வயதுடைய சீனித்தம்பி கலால்தீன் எனத் தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று