ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளுக்கு ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்களாக பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நெளசாட், அம்பாறை மேற்கு தொகுதி அமைப்பாளராக நாடாளுன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரேசகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி, அம்பாறை மாவட்ட அமைப்பாளராக சட்டத்தரணி அன்வர் சியாத் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான நாடாளுன்ற உறுப்பினர் சரத் வீரேசகரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் நியமிக்கப்படவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் லிபியா சென்றுள்ளதால் இன்றைய நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது