மயோன் முஸ்தபாவிற்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்.


நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் பொன்சேகாவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சரான மயோன் முஸ்தபா, ஜாதிக்க நிதாகஸ் பெரமுன வின் முன்நிலை உறுப்பினரும் முன்னாள் பாராளுன்ற உறுப்பினருமான முஸம்மிலுக்கு 43 லட்சம் ரூபா லஞ்சம் வழங்க முற்பட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மயோன் முஸ்தபாவின் இச்செயற்பாடானது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் ஆதாரங்களாக தொலைபேசி உரையாடல்களுக்கான ஒலிப்பதிவுகள் மற்றும் சந்திப்புக்களுக்கான வீடியோ பதிவுகள் என்பன நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன் சாட்சிகளாக 21 பேரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்