தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் 41 பேர் கைது
பிந்திய செய்தி
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 41 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் இன்று காலை இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டது.
இவற்றை கருத்தில் கொண்டே மறு அறிவித்தல் வரை பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் வேண்டும் என நிர்வாகம் பணித்துள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 41 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடை
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் இன்று காலை இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டது.
இவற்றை கருத்தில் கொண்டே மறு அறிவித்தல் வரை பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் வேண்டும் என நிர்வாகம் பணித்துள்ளது.
Comments
Post a Comment