தமிழ் பெண்ணுக்கும் முஸ்லிம் ஆசிரியருக்கும் இந்துமத முறைப்படி திருமணம்

 மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு நேற்று இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான் (28வயது) என்ற முஸ்லிம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி (23வயது) என்ற பெண்ணுக்கும் நேற்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த முஸ்லிம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக் கொண்டதோடு அவர் தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக் கொண்டுள்ளார்.
இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் மோகன் தலைமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன் இவர்களுக்கான திருமணத்தை இந்துமத முறைப்படி செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர்  நடாத்தி வைத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்