நற்பிட்டிமுனையில் இன்று டெங்கு ஒழிப்பு தினம் அனுஸ்டிக்கப் பட்டது .

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு " டெங்கை  ஒழிக்க ஒற்றுமையாக ஒன்றிணைவோம் " எனும் தொனிப் பொருளில் நற்பிட்டிமுனையில் இன்று டெங்கு ஒழிப்பு தினம் அனுஸ்டிக்கப் பட்டது .

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதொச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம். முபீதின் பணிப்புரைக்கமைவாக  அல் - கரீம் நெசவாளர்  மற்றும் கைத்தொழில் சமூக சேவைகல் அமைப்பினரால்  நற்பிட்டிமுனை  அரச ஆயுர்வேத வைத்திய சாலை வழாகம் ,தையல் பயிற்சி நிலைய வழாகம் ,நெசவு பயிற்சி நிலையம் ,நெசவு பயிற்சி போதனா நிலையம்  மற்றும் பிரதேச வடிகான்கள் சுத்தம் செய்யப் பட்டன .

இந்த நிகழ்வுக்கு  அமைப்பின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை  அமைச்சின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.ஹலீம் ,அமைப்பின்  செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,மற்றும் அமைப்பின் அணைத்து அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர் 








Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது