கல்முனை வலயக்கல்வி அலுவலக வாணி விழா

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நவராத்திரி விழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடை பெறவுள்ளது . வலயக்கல்வி அலுவலக  நலன் புரிச்சங்கம் ஏற்பாடு செய்துள்ள  நவராத்திரி விழாவின் வாணி விழா நிகழ்வுகள் பியாதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் இடம் பெறவுள்ளது 

இந்நிகழ்வுகளில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் , ஓய்வு பெற்ற தபாலதிபர்  கலா பூசணம்  வ.ஞான மாணிக்கம்  சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொள்ளவுள்ளதாக வலயக்கல்வி அலுவலக் நலன் புரிச்சங்க தலைவர் யு.எம்.இஸ்ஹாக்  தெரிவித்தார்.
பாண்டிருப்பு  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய குரு  சிவஸ்ரீ  மு.கு.சபாரத்தினம் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் இடம் பெறவுள்ளதுடன்  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை , உவெஸ்லி உயர்தர பாட சாலை  மாணவிகளின் நடன நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதுடன்  மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும்,உதவிக் கல்விப் பணிப்பாளர்களும் , கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும் ,ஆசிரிய ஆலோசகர்களும்மற்றும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது