அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஊடக சங்கமம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  ஊடக சங்கமம் ஓன்று கூடல் நிகழ்ச்சி எதிர்வரும் 01.03.2014  சனிக்கிழமை  காலை 8.00 மணிக்கு மருதமுனை அல் -மதீனா வித்தியாலயத்தில்  நடை பெறவுள்ளது. கடந்த 2013.12.01 ஆந்திகதி நடை பெறவிருந்த  இந்த நிகழ்வு கல்விப் பொது தராதர பரீட்சை காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம்  மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில்  இடம் பெரும் நிகழ்வில் ஊடக குடும்பத்தவர்களின் விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள் நடை பெறவுள்ளன . அன்றைய தினம் சம்மேளனத்தின் மாதாந்த கூட்டம் மு.ப.11.00 மணி முதல் 12.00 மணி வரை நடை பெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் ஐ.எல்.எம். ரிஸான்  தெரிவித்துள்ளார் .

சங்கம நிகழ்வில் காலை உணவு ,மதிய உணவு, இருநேர தேநீர் உபசரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஊடக சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் தங்களது குடும்பத்தவர்களின் விபரங்களை சம்மேளன பொருளாளர் பீ.எம்.எம்.ஏ.காதரிடம் 0772612095 இலக்க  தொலை பேசி மூலம் உறுதிப் படுத்திக் கொள்ளுமாறு சம்மேளனத்தின் செயலாளர் ரிஸான்  கேட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி