கல்முனை வர்த்தகர் மின்சாரம் தாக்கி மரணம்

கல்முனை வர்த்தகர் மின்சாரம் தாக்கி மரணமான  சம்பவம் இன்று கல்முனையில் இடம் பெற்றுள்ளது .சம்பவத்தில் மரணமானவர் நட்பிட்டிமுனையை சேர்ந்த 62  வயதுடைய முகம்மது இஸ்மாயில் முகம்மது ஹனிபா என்பவராகும் .
கல்முனையில் தெருவோர  புடவை வியாபாரம் செய்யும்  நபரான இவர் சம்பவம் நடை பெற்ற இன்று வர்த்தகத்தை முடித்து விட்டு புடவை பொதியை வாடகை அறையில் வைக்க சென்ற போதே இந்த விபரீதம் ஏற்ப்பட்டு மரணமாகி உள்ளார் .
சம்பவம் தொடர்பாக கல்முனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .கல்முனை நீதிவான் நீதிபதியின் உத்தரவுக்கமைய சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்