கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் 128ஆவது ஸ்தாபகர் தின நிகழ்வுகள்

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் 128ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இறுதி நாள் நிகழ்வுகள்  புதன் கிழமை இடம்பெற்றன.

மேற்படி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 128ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அப்பாடசாலையின் ஸ்தாபகர்களை நினைவு கூறியதோடு வரலாற்று நினைவுக்கட்டிடம் திறப்பு. மரம் நடுகை. கலைநிகழ்ச்சிகள். பரிசளிப்பு மற்றும் அதிதி கௌரவிப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காஸிநாதர் பிரதம அதிதியாகவும். கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி பி.சுவர்ணராஜா விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் நலன் விரும்பிகள் மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் பல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.











Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி