தமக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் ஆசனங்களை எக்காரணத்திற்காகவும் வேறு ஓர் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடியாது

தமக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் ஆசனங்களை எக்காரணத்திற்காகவும் வேறு ஓர் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்ட காரணத்தினால் தமக்கு ஆசனம் கிடைக்கவில்லை என சில கூட்டணி கட்சிகள் செய்து வரும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதனை தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்