வயிற்றில் பாம்பை சுமக்கும் அதிசய பெண்!

வழமையாக பெண்களின் வயிற்றில் குழந்தை வளர்வதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்கிறது என்றால் அதிசயமாக இருக்கிறதா?


ஆம்! தென் ஆப்பிரிக்காவில் கிழக்கு ஜொஹன்னஸ் பேர்க்கின் வொஸ்லூரஸ்  இடத்தைச் சேர்ந்த மரியா சொடெட்ஸி (49) என்ற பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அடிக்கடி நோயினால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், நோய்க்கான காரணம் வயிற்றில் இருக்கும் பாம்பாக இருக்கலாம் என்றும் இதனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்காக பெருமளவு பணம் தேவைப்படும் எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவரால் டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள முடியததால் மதகுரு ஒருவரிடம் நாட்டு வைத்தியத்தை மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து மரியா கூறுகையில்இ இந்த சிகிச்சையால் எனது பற்கள் அனைத்தும் இழந்து விட்டேன். எனது காதலனும் என்னை விட்டுச் சென்றுவிட்டார். எப்படியோ மதகுரு இன்றி இந்த பாம்பை நீக்க முடியாது  என்று தாம்  நம்புவதாக தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருப்பினும் நிறை மாதத்துக்கு முன்னரே அந்த பெண்ணின் வயிற்றில்  வளரும்  பாம்பை அந்த மதகுரு அழித்து விட்டால் போதும். 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்